Followers



மாவை வரோதயன்

(1965 - 2009)

சத்தியகுமாரன் என்னும் இயற்பெயரைக் கொண்ட மாவை வரோத யன் யாழ்ப்பாணத்தின் வடக்கேயுள்ள மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பில் பரீட்சைத் திணைக்களத்திலும் பின்னர் இலங்கை சுகாதார சேவையில் சுகாதாரப் பரிசோதகராகவும் பணியாற்றி யுள்ளார்.
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், விமர்சனம் என பன்முகத் தளத்தில் செயற்பட்டவர். தேசிய கலை இலக்கியப் பேரவையின் இலக் கியக் குழுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். வானொலி நிகழ்ச்சி களிலும் பங்குபற்றியுள்ளார்.

இன்னமும் வாழ்வேன் (கவிதை), வேப்பமரம் (சிறுகதை) ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. தாயகம் சஞ்சிகையில் வலிகாமம் மைந் தர்கள் என்ற தலைப்பில் ஒரு தொடரும் எழுதியிருக்கிறார்.

0 comments to “ மாவை வரோதயன் ”

Post a Comment

About Me

ஆசிரியர் -சித்தாந்தன், இணையாசிரியர்கள் -சி.ரமேஷ், மருதம் கேதீஸ்