Followers



கடவுளின் நாவிலிருந்து அவர்கள் எழுதிச் சென்றார்கள்

கனகரமேஸ்

வதை சூழ் ஆத்மாவின்
கிழிபடும் இதழ்களுக்கிடையில்
சிக்கிக் கிடந்தது வார்த்தை
துக்கித்த இருளைப்
பிரவகிக்கும் நோக்குடன்
அதன் விழிகளில் துலங்கும்
கூர்மை
என்னை வேட்டையாடத்
தயாராகவே இருந்தது.
வன்மம் குடிகொள்ள
குதறும் வார்த்தைகளை
கூரிய அம்பாக்கி
சமருக்குத் தயாராகும் கணத்தில்
கடவுளின் நாவிலிருந்து
அவர்கள் எழுதிச் சென்றார்கள்
நான் ஏலவே கொல்லப்பட்டவன்
என்பதை

0 comments to “ கடவுளின் நாவிலிருந்து அவர்கள் எழுதிச் சென்றார்கள் ”

Post a Comment

About Me

ஆசிரியர் -சித்தாந்தன், இணையாசிரியர்கள் -சி.ரமேஷ், மருதம் கேதீஸ்