சித்தாந்தன்
மலைகளைப் பகிர்ந்துண்ண
அழைத்தாய்
ஆயிரமாயிரம் வெள்ளிகளைச் சூடிய வானம்
கடல் அலைகளில் தத்தளித்துக்கொண்டிருந்தது
மீண்டும் மீண்டும் அழைத்தாய்
காற்று மர இலைகளில் ஒளித்துக் கிடந்தது
இரவு பனித்துளியாய்
புல் நுனிகளில் தேங்கி வழிந்தது
முதலில்
மலைகளை உண்ணும் நுட்பங்களைப் போதித்தாய்
பிறகு
மலைகளின் சுவை பற்றிய பாடல்களை
இசைத்துக் காட்டினாய்
மழைப் பொழிவுகளுக்குள்
மலைகள் வளரும் அதிசயங்களை
வசியச் சொற்களில் சொன்னாய்
மலைகள் தீர்ந்துபோகும் ஒருநாள் வருமெனில்
அப்போது
மலைகளைத் தின்று மலைகளாகிய நாம்
நம்மையே பகிர்ந்துண்டு
பசியாறலாம் என்றாய்
About Me
- மறுபாதி
- ஆசிரியர் -சித்தாந்தன், இணையாசிரியர்கள் -சி.ரமேஷ், மருதம் கேதீஸ்
Blog Archive
-
▼
2010
(17)
-
▼
June
(13)
- கடவுளின் நாவிலிருந்து அவர்கள் எழுதிச் சென்றார்கள்
- தொலைவில் ஒரு வீடு
- பசியோடிருப்பவனின் அழைப்பு
- தமிழ்க் கவிதை இன்று
- வெள்ளை மாரனாரின் 'புனிதத்துக்குள் கட்டுறும் அபத்த...
- பெண்ணியாவின்“இது நதியின் நாள்“
- விழுங்கும் தருணங்கள் - கலைமகள் கவிதைகள்
- அச்சம்
- <!--[if gte mso 9]> Normal 0 ...
- தமிழின் புதுக் கவிதைகளுள் குறிப்பிடத்தக்கவரான சி.ம...
- கடிதங்கள்
- சிதறுண்ட காலக் கடிகாரம்
- தலையங்கம்
-
▼
June
(13)